யாழ். மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

Posted by - December 21, 2017

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக இவ் உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கு அதிகளவான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கட்டுபணத்தை செலுத்தியுள்ளதாகவும் அதனால் நாளைய (வியாழக்கிழமை) தினம் அதிகளவானோர் வேட்புமனுவினை தாக்கல் செய்ய வருவார்கள் எனவும் தாம் எதிர்பார்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சர் ஒரு அரசியல்வாதியாக தோற்றுவிட்டார்- டிலான் பெரேரா

Posted by - December 21, 2017

சிறந்த நீதியரசரான வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஒரு அரசியல்வாதியாக தோல்வியடைந்துவிட்டதாக சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசாங்கம் வழங்கும் நிதியையே சரியான முறையில் முழுமையாக பயன்படுத்தாத முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மலேஷியா வழங்கும் நிதியை என்ன செய்வார் என்று புரியவில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கை விஜயம் மேற்கொண்டிருந்த மலேஷிய பிரதமரை முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது, வடக்கை கட்டி எழுப்புவதற்கு உதவிகள் வழங்குவதாக மலேஷிய பிரதமர்

ஆர்.கே.நகர் தேர்தல்: அ.திமு.க. வேட்பாளர் மதுசூதனன் ஓட்டு போட்டார்

Posted by - December 21, 2017

பழைய வண்ணாரப்பேட்டை டி.எச்.ரோட்டில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் மனைவி ஜீவாவுடன் வந்து ஓட்டு போட்டார்.

பொன்னாலைக் கடலில் திருடியவர் தொழிலாளர்களால் மடக்கிப்பிடிப்பு

Posted by - December 21, 2017

பொன்னாலைக் கடலில் தொழிலாளர்களின் வலைகளில் இருந்து கடல் உணவுகளைத் திருடிய நபர் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றது. கடல் உணவுகளைத் திருடிய நபர் சுழிபுரத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொன்னாலைக் கடலில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கூட்டுவலைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பல லட்சம் ரூபாய்களைச் செலவுசெய்து வலைகள் உள்ளிட்ட கடற்றொழில் உபகரணங்களைக் கொள்வனவு செய்து கூட்டு வலைகளைத் தயார் செய்து கடலில் வைத்து

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஆர்.கே.நகர் வாக்கு நிலவரம் வெளியிடப்படும்: ராஜேஷ் லக்கானி

Posted by - December 21, 2017

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தகவல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

நாளை முதல் தீவி­ர­ம­டையும் தேர்தல் பிர­சார போர்.!

Posted by - December 21, 2017

எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத்­தாக்­கல்கள் அனைத்தும் இன்று நண்­பகல் 12 மணி­யுடன் நிறை­வுக்கு வரு­கின்­றன. அதன்­படி  நாளை­ முதல் அர­சியல் கட்­சிகள்  மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்­களின்  வேட்­பா­ளர்கள் கடும்  பிர­சா­ரப்­ப­ணி­களில் ஈடு­ப­ட­வுள்­ளனர். அது­மட்­டு­மன்றி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான  ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினர், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினர், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­ம­யைி­லான  பொது­ஜன பெர­முன ஆகிய கட்­சிகள்  நாட­ளா­விய ரீதியில்  கடும் பிர­சா­ரப்­ப­ணி­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளன. அந்­த­வ­கையில்  நாளை முதல் தேர்தல் களம்

வாழ்க்கைச் செலவு அனர்த்த நிவா­ரணம் பிர­த­மரின் 8 அம்ச விசேட தீர்வுத்திட்டம்

Posted by - December 21, 2017

வாழ்க்கைச் செலவு தொடர்­பி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை ஏற்­ப­டுத்­துதல் வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் வரட்சி போன்ற இயற்கை அனர்த்­தங்­களில் நிவா­ர­ணங்­களை பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் பிர­த­ம­ரினால் முன்­வைக்­கப்­பட்ட 8 அம்­சங்­கள் அடங்­கிய தீர்வுத்திட்­டத்­திற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடகச்சந்­திப்பு நேற்று அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதன் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இத­ன­டிப்­ப­டையில் வாழ்க்கைச் செலவு தொடர்­பான அமைச்­ச­ரவை உப குழு மற்றும் பொரு­ளா­தார முகா­மைத்­துவம் தொடர்­பான அமைச்­ச­ரவை செயற்­குழு ஆகிய குழுக்கள் முன்­னெ­டுத்த கலந்­து­ரை­யா­டல்­களில்

தமிழரசுக் கட்சி உறுப்பினர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுடன் இணைவு

Posted by - December 21, 2017

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான உறுப்பினர் குமாரசாமி ஆறுமுகம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் சம்பிரதாயபூர்வமாக இணைந்துகொண்டு மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக குமாரசாமி ஆறுமுகம் தெரிவித்தார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் அதன் மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், கட்சியில் இணைந்துகொண்ட  குமாரசாமி ஆறுமுகத்தை  சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார். இது தொடர்பில், கட்சியில் இணைந்துகொண்ட  குமாரசாமி ஆறுமுகம் கருத்துத் தெரிவிக்கையில், சமாதான நீதிவான் ஆகிய நான், தந்தை செல்வா காலம்

ஜெயலலிதா வீடியோ விவகாரம்: தினகரன் மீது நடவடிக்கை பாயுமா?

Posted by - December 21, 2017

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது. இதன் தொடர்ச்சியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட கூடும் என்றும் போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மண்சரிவு : ரயில் சேவைகள் பாதிப்பு

Posted by - December 21, 2017

பதுளை – கொழும்பு பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் தலவாக்கலை புகையிரத நிலையத்தின் சுரங்கப்பகுதிக்கு அருகாமையில், 115 ஆவது மைல் கட்டைப்பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் பாதிப்படைந்தன. இதன் காரணமாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவுநேர தபால் ரயில் தலவாக்கலை புகையிரத நிலையத்தில் சுமார் ஒரு மணித்தியாலயம் தரித்து வைக்கப்பட்டது. அதன்பின் பாதிப்பேற்பட்ட ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய