யாழ். மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

1039 0

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இவ் உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கு அதிகளவான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கட்டுபணத்தை செலுத்தியுள்ளதாகவும் அதனால் நாளைய (வியாழக்கிழமை) தினம் அதிகளவானோர் வேட்புமனுவினை தாக்கல் செய்ய வருவார்கள் எனவும் தாம் எதிர்பார்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக யாழ்.மாவட்ட செயலகத்துக்குள் அரச வாகனங்களை தவிர்ந்த ஏனைய எந்தவொரு வாகனமும் உட் பிரவசிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளைய (இன்று) தினம் நண்பகல் 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் கால எல்லையானது முடிவடைவதால் அதற்கு முன்பாக கட்சிகள் சுயேட்சை குழுக்கள் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான வேட்புமனுவானது தாக்கல் செய்யும் கால எல்லையானது இன்றய தினம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment