முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்பு!

Posted by - November 1, 2017

யாழ்ப்பாணம்  கோப்பாய் கைதடி வீதியில்  பாலத்தடியில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கிறது. Np .HP-6340 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த .சங்கத்தானை சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான  49 வயதுடைய கனகரட்னம் கோணேஸ்வரன் வயது 49  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டராவார். இவர் யாழ் சாவகச்சேரி சகலகலாவல்வி ஆரம்பபாடசாலை யின் ஆசிரியருமாவார்.இவர் நேற்றிரவு 9 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். சம்பவம்  விபத்தா கொலையா

யாழில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு

Posted by - November 1, 2017

வடக்கு மாகாணத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் 87 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதுடன் வடக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட யாழ் மாவட்டத்திலேயே சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள புள்ளி விபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் புள்ளி விபரத்தில் தெரிவிக்கையில் வடக்கு மாகாணத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு பதிக்கப்பட்டதாக யாழ் மாவட்டத்தில் 30 சிறுவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 சிறுவர்களும் மன்னார் மாவட்டத்தில் 9 சிறுவர்களும் வவுனியா மாவட்டத்தில் 17 சிறுவர்களும் கிளிநொச்சி

கைக்குண்டை வைத்திருந்த குடும்பத்தலைவருக்கு சிறைத் தண்டனை

Posted by - November 1, 2017

வடமராட்சி, அல்வாய் பகுதியில் கைக்குண்டை உடமையில் வைத்திருந்த குடும்பத் தலைவருக்கு 8 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதனைக் கருத்தில் எடுத்தே குற்றவாளிக்கு 8 மாதங்களாக தண்டனைக்காலம் குறைக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழரின் அவலம்

Posted by - November 1, 2017

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி தென்னமரவாடி போன்ற கிராமங்களில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழர்கள் 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் இதன் பின்னர் 30 வருடங்களுக்கு பின்னர் 2011ஆம் ஆண்டிற்கு பின்னர் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மக்கள் இப்பகுதிகளில் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்படி பிரதேங்களில் மீள்குடியேறிய அதிகளவான குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த ஏழு ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் இது தொடர்பில் பாதிக்கப்பட்ட

ஊர்காவற்றுறை சென் அன்ரனீஸ் கல்லூரியின் பரிசளிப்புவிழா

Posted by - November 1, 2017

ஊர்காவற்றுறை சென் அன்ரனீஸ் கல்லூரியின் பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார். நேற்று (31.10.2017) பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியில் விளையாட்டு நிகழ்வுகளில் பதக்கங்களை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து பாராட்டி கௌரவித்தார். பாடசாலை அதிபர் பாதர் டேவிட் எட்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்து

வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - November 1, 2017

வவுனியா பேருந்து நிலையத்தில் இன்று காலை 11.30 மணியளவில் கஞ்சாவினை எடுத்துச் சென்ற நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இன்று 11.30 மணியளவில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் ராஜ்மோகன் என்பவர் கிளிநொச்சியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற பேருந்தில் 3 கிலோ 610 கிராம் கேரளா கஞ்சாவினை தனது பயணப்பொதியில் மறைத்து எடுத்துச் சென்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். போதை ஒழிப்பு பிரிவினர் வவுனியா பேருந்து நிலையத்தில் சந்தேகத்தில் சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவினைக்கைப்பற்றியுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபர்

உருளைக்கிழங்கு விதைகளுக்கு 50 வீத சலுகை

Posted by - November 1, 2017

பருவமற்ற காலத்தில் உருளைக்கிழங்கு செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதைகளுக்கு 50 வீத சலுகை வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு, மேற்கொள்ளப்படவுள்ள கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் மற்றும் செயற்படுத்தல் திட்டத்தினை தயாரித்தல் தொடர்பாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கினார். நாட்டில் உருளைக்கிழங்கு பயிர் செய்கை மேற்கொள்ளப்படும் பருவத்தில் வெளிநாட்டிலிருந்து உருளைக்கிழங்கினை இறக்குமதி செய்வதை

பெட்றோல், டீசல் விலை குறைப்பு !

Posted by - November 1, 2017

அடுத்த ஓரிரு வாரங்களில் டீசல் மாற்று பெட்றோலின் விலைகளை குறைக்க இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற ஆய்வுக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பசுக்களை கொலை செய்வதை கட்டுப்படுத்த கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - November 1, 2017

பிரதேச செயலகங்களினால் கால்நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பதற்கு கால்நடை மருத்துவர்களின் சிபாரிசு அவசியமாகும் என்பதுடன், கால்நடை மருத்துவர்களின் வேலை நிறுத்தம் இடம்பெறும் காலத்தில் பிரதேச செயலகங்களினால் அத்தகைய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பின் அவை எவ்வாறு வழங்கப்பட்டன என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு, மேற்கொள்ளப்படவுள்ள கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் மற்றும் செயற்படுத்தல் திட்டத்தினை தயாரித்தல் தொடர்பாக நேற்று

லலித் ஜய­சிங்­க­வுக்கு எதி­ராக மற்­று­மொரு குற்­றச்­சாட்டு!

Posted by - November 1, 2017

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்­க­வுக்கு எதி­ராக மற்­று­மொரு குற்­றச்­சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் குற்­றச்­சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.