ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கு அமையவே புதிய அரசியல் அமைப்பு-மகிந்தானந்த அலுத்கமகே
புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்டமூலம், ஐக்கிய தேசிய கட்சியின் தேவைப்பாடுகளுக்கு அமையவே முன்வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, ஒன்றிணைந்த எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலமானது ஜனாதிபதியினாலேயோ அல்லது ஏனைய தரப்பினரினாலேயோ மேற்கொள்ளப்படவில்லை. ஐக்கிய தேசிய கட்சியினரின் தேவைப்பாடுகளுக்கமைய, ஐக்கிய தேசிய கட்சியினரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெளிவாக விளங்குகிறது. எனவே இது தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிப்பது காலவிரயமாகும்

