யாழில் மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய்த் தடுப்பூசி

449 0

யாழ்.மாவட்­டத்தில் முதன் முத­லாக மாண­வி­க­ளுக்கு கருப்பை கழுத்துப் புற்­றுநோய்த் தடுப்­பூசி ஏற்­றப்­பட்­டுள்­ளது.

கருப்பை கழுத்துப் புற்­று­நோயால் பாதிக்­கப்­படும் பெண்­களின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­ற­மையை அடுத்­து ­இந் ­நோயைக் கட்­டுப்­ப­டுத்த முன்­வந்­துள்­ள சுகா­தார அமைச்சு மாண­வி­க­ளுக்கு இளம் வயதில் தடுப்­பூசி ஏற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளது.

யாழ்.மாவட்­டத்தில் முதன் முத­லாக வலி­காமம் தெற்கு பிர­தே­சத்தில் சுன்­னாகம் ஸ்கந்­த­வ­ரோ­தய கல்­லூ­ரியில் ௬ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 44 மாண­வி­க­ளுக்கு கல்­லூ­ரியில் வைத்து கருப்­பை­க­ழுத்து புற்­றுநோய்த் தடுப்­பூசி ஏற்­றப்­பட்­டுள்­ளது.

உடுவில் சுகா­தார வைத்­திய அதி­காரி பொதுச் சுகா­தாரப் பரி­சோ­த­கர்கள் பிராந்­திய தொற்­றுநோய்த் தடுப்பு அதிகாரி உட்பட சம்பந்தப்பட்ட பல அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a comment