நூறு வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு மாதாந்த கொடுப்பனவு

Posted by - November 8, 2017

நூறு வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைவாக இவர்களது வாழ்க்கையை பாதுகாக்கும் நோக்கில் 100 வயதிற்கு மேற்பட்ட குறைந்த வருமானத்தை கொண்ட முதியவர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு சமூக வலுவூட்டல்கள் நலன்புரிகள் மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்பீ திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 100 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள் நாடொன்றில் இருப்பது அந் நாட்டின் சுகாதாரத்துறை அபிவிருத்தியில் காணப்பட்டுள்ள முன்னேற்றமாக கருதமுடியும்.

அமெரிக்க இராஜதந்திரி – சுமந்திரன் சந்திப்பு

Posted by - November 8, 2017

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, பதில் உதவிச் செயலாளர் ரொம் வஜ்டா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில், கொழும்பில் உள்ள அமெரிக்க துணைத் தூதுவர் ரொபெர்ட் ஹில்டனும் கலந்து கொண்டார்.

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

Posted by - November 8, 2017

இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமரின் செயலாளர், போக்குவரத்து பிரதியமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – இன்று நள்ளிரவு முதல் நடைமுறையில்

Posted by - November 8, 2017

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர, கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது குறிப்பிட்டார். விதை உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, கருவாடு, தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் ஆகிய பொருட்களின் வரிகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, விதை உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஒரு கிலோவிற்கான விசேட வர்த்தக பொருள் வரி 39 ரூபாவாலும், பருப்பு

குடும்ப பெண் திடிர் மரணம் 

Posted by - November 8, 2017

நாவலபிட்டி சொய்சாகல பகுதியில் வீடு ஒன்றில் மரக்கறி அறிந்து கொண்டிருந்த குடும்ப பெண் திடீர்ரென கிழே வீழ்ந்து மரணமாகியுள்ளார். அவ்வாறு கீழே வீழ்ந்த பெண்னை உறவினர்கள் வைத்திசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்ததாக நாவலபிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று புதன் கிழமை காலை 11மணியளவில்  அளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிர் இழந்தவர் 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான பழனியாண்டி நிர்மலா என தெரிவிக்கப்படுகிறது. சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளது.

பொருட்களின் வரி குறைப்பு

Posted by - November 8, 2017

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி குறைக்கப்படுகிறது. நிதியமைச்சர் மங்கள சமரவீர, கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டார். விதை உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, கருவாடு, தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் ஆகிய பொருட்களின் வரிகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, விதை உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஒரு கிலோவிற்கான விசேட வர்த்தக பொருள் வரி 39 ரூபாவாலும்,

விடுதலை புலிகள் உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

Posted by - November 8, 2017

2008ஆம் ஆண்டு பிலியந்தலையில் அரச பேருந்து ஒன்றுக்கு குண்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதாகி இருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த குண்டுத் தாக்குதலில் 30பேர் பலியானதுடன், 42 பேர் காயமடைந்தனர். இது தொடர்பில் கைதாகி இருந்த சச்சிதாநந்தன் ஆனந்த சுகுமார் என்ற அவருக்கு எதிராக 93 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதன்அடிப்படையில் அவருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஒருபோதும் வெளியேறாது – சிவசக்தி ஆனந்தன்

Posted by - November 8, 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஒருபோதும் வெளியேறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். தமது கட்சி கூட்டமைப்பில் இருந்து விலகிவிட்டதாக திட்டமிட்ட போலிப்பிரசாரம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். – சிவசக்தி-

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியாக போராடுவோம் – யாழ்.பல்கலை மாணவர்கள் 

Posted by - November 8, 2017

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியாக போராடுவோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்  அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாம் தொடர்ச்சியாக போராடுவோம். அதே சமயம் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் தங்களுடைய பொறுப்பை அறிந்து சகல அரசியல் கைதிகளினதும் விடுதலைக்காக  உழைக்கவேண்டும். மேற்கண்டவாறு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கே.கிருஷ்ணமேன்ன் கூறியுள்ளார். பல்கலைகழகத்தின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு

வடகொரியாவுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை 

Posted by - November 8, 2017

தென்கொரியாவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய தலைவர் மிக் ஜொன் உன்னை கடுமையாக எச்சரித்துள்ளார். தங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று, தங்களை சோதிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீண்ட ஆசிய விஜயத்தை மேற்கொண்டுள்ள டொனால்ட்  ட்ரம்ப் தற்போது  தென்கொரியாவில் சந்திப்புகளை நடத்துகிறார். இதன்படி இன்று அவர் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட டொனால்ட் ட்ரம்ப், வடகொரியாவினால் முன்வைக்கப்படுகின்ற ஆயுதங்கள் எவையும், அந்த நாட்டைப் பாதுகாக்கப்