தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியாக போராடுவோம் – யாழ்.பல்கலை மாணவர்கள் 

391 0

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியாக போராடுவோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்  அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாம் தொடர்ச்சியாக போராடுவோம்.

அதே சமயம் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் தங்களுடைய பொறுப்பை அறிந்து சகல அரசியல் கைதிகளினதும் விடுதலைக்காக  உழைக்கவேண்டும்.

மேற்கண்டவாறு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கே.கிருஷ்ணமேன்ன் கூறியுள்ளார்.

பல்கலைகழகத்தின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியிருந்த கதவடைப்பு போராட்டத்தினால் யாழ். பல்கலைக்கழகத்தின் 3 பீடங்களின் வகுப்பு புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டது.

தற்போது அரசியல் கைதிகளுக்கு ஆதரவான போராட்டத்தை மாணவர்கள் நிறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து 13ஆம்  திகதி வகுப்புக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

13 ஆம் திகதி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பல்கலைகழகத்திற்குள் அமைதியான முறையில் அரசியல் கைதிகளுக்காக போராட்டம் நடத்துவோம்.

அதேபோல் தமிழ் மக்கள் அரசியல் கைதிகளுடைய விடுதலையின் தேவையை உணர்ந்து அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் அரசியல் கைதிகளுக்காக இணைந்து போராட வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment