விடுதலை புலிகள் உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

340 0

2008ஆம் ஆண்டு பிலியந்தலையில் அரச பேருந்து ஒன்றுக்கு குண்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதாகி இருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த குண்டுத் தாக்குதலில் 30பேர் பலியானதுடன், 42 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பில் கைதாகி இருந்த சச்சிதாநந்தன் ஆனந்த சுகுமார் என்ற அவருக்கு எதிராக 93 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதன்அடிப்படையில் அவருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment