தென்கொரியாவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய தலைவர் மிக் ஜொன் உன்னை கடுமையாக எச்சரித்துள்ளார்.
தங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று, தங்களை சோதிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட ஆசிய விஜயத்தை மேற்கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தற்போது தென்கொரியாவில் சந்திப்புகளை நடத்துகிறார்.
இதன்படி இன்று அவர் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட டொனால்ட் ட்ரம்ப், வடகொரியாவினால் முன்வைக்கப்படுகின்ற ஆயுதங்கள் எவையும், அந்த நாட்டைப் பாதுகாக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.