தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாம் தொடர்ச்சியாக போராடுவோம்-யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கே.கிருஷ்ணமேனன்

Posted by - November 8, 2017

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நாம் தொடர்ச்சியாக போராடுவோம் என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கே.கிருஷ்ணமேனன் கூறியுள்ளார். அதே சமயம் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் தங்களுடைய பொறுப்பை அறிந்து சகல அரசியல் கைதிகளினதும் விடுதலைக்காக உழைக்கவேண்டும் என அவர் கூறியுள்ளார். பல்கலைகழகத்தின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ் அரசியல் கைதிகளுக்கு

2018 வரவு – செலவுத் திட்டம்: இறுதிக் கட்டப் பணிகள் மும்முரம்

Posted by - November 8, 2017

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பாராளுமன்றில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதைத் தயார் செய்யும் இறுதிக்கட்டப் பணிகளில் நிதியமைச்சர் மங்கள சமரவீர முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார். அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடைபெற்றுவரும் இப்பணிகளில், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எஸ்.எச்.சமரதுங்கவும் ஈடுபட்டுள்ளார். வழமைபோலல்லாது, இம்முறை வரவு-செலவுத் திட்டம் வாசிக்கப்படுவதற்கு முதல் நாளே அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பதுடன், அவை உடனடியாக இன்று (8) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை

தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்

Posted by - November 8, 2017

நாட்டில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விசாரித்து துரித கதியில் தீர்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் விசேட மேல் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், பிரதம நீதியரசரினால் பெயர் குறிப்பிடப்பட்ட மூவர் அடங்கிய நீதிபதிகளினை கொண்ட மேல் நீதிமன்றம் ஒன்றை அரசியலமைப்பின் 105 (1) (எ) பிரிவின் கீழ் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்தொதுக்கப்படுகின்ற குற்றங்கள் தொடர்பில் வழக்கு விசாரணைகளை சட்டமாதிபரின் வேண்டுகோளின் அடிப்படையில் பிரதம நீதியரசரினால் அந்நீதிமன்றத்திற்கு ஒப்படைப்பதற்கும், அந்நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிராக

பாராளுமன்றம் அமைந்துள்ள இடப்பகுதியின் உரிமையினை மாற்ற திட்டம்

Posted by - November 8, 2017

பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்காக பயன்படுத்தப்படுகின்ற இதுவரை பாராளுமன்றத்திற்கு உரித்தற்று காணப்படுகின்ற இடப்பகுதியின் உரிமையினை முறையான முறையில் இலங்கை பாராளுமன்றத்திற்கே பெற்றுக் கொடுப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த இடப்பகுதி இதுவரை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்சம் மற்றும் ஊழல் சட்டத்தில் திருத்தம்

Posted by - November 8, 2017

இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலினை இல்லாதொழிப்பதற்காக காணப்படுகின்ற சட்ட திட்டங்களை காலத்திற்கு ஏற்றால் போல் திருத்தியமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி தற்போது காணப்படுகின்ற சட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை பரிசீலிக்கும் ஆணைக்குழு சட்டம் மற்றும் அதனுடன் தொடர்பான சட்டங்களை திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்மக்கள் வாழும் புலம்பெயர் நாடுகளில் தனிநாட்டினைக் கோருங்கள் – அபயதிஸ்ஸ தேரர்

Posted by - November 8, 2017

தமிழ்மக்களுக்கு என்று ஒரு தனிநாடு இல்லாததே தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வைத் தேடுவதிலும் பார்க்க அதிகளவான தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடு ஒன்றில் ஒரு பகுதியைத் தனிநாடாகக் கோருங்கள் என சிரேஷ;ட விரிரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

குண்டு வீசி 30 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Posted by - November 8, 2017

பிலியந்தலை பஸ் தரிப்பிடத்தில் வைத்து பஸ் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி 30 பேரைக் கொன்ற வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 

வடக்கு முதல்வரின் நிதியில் உதவிப் பொருள்கள் வழங்கல்!

Posted by - November 8, 2017

வடக்கு மாகாண முதலைச்சர் நீதியரசர் சி.விவிக்னேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் 11 இலட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான உதவிப் பொருள்கள் பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டன. மீனவர் ஓருவருக்கு 79 ஆயிரம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள்இ சுயதொழில் முயற்சியாளர் ஒருவருக்கு 73 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒலி பெருக்கி உபகரணங்கள்இ பல்கலைக்கழக மாணொர்களுக்கு 2 இலட்சத்து 76 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிகணனிகள் இ பாடசாலை மாணவர்கள் 18 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள்இ

கல்முனையை நான்காக பிரிக்க வேண்டுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் பேசவேண்டும்-பைஸர் முஸ்­தபா

Posted by - November 8, 2017

கல்­மு­னையை நான்­காக பிரிக்­க­வேண்­டு­மானால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேச வேண்டும். அவர்­களின் இணக்­கத்­துட­னேயே அது தொடர்­பி­லான நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்க முடியும் எனக் குறிப்­பிட்ட அமைச்சர் பைஸர் முஸ்­தபா, சாய்ந்­த­ம­ருது விட­யத்­தினை முன்­னெ­டுக்க முடி­யா­மைக்கு முஸ்லிம் கட்­சி­க­ளி­டையே காணப்­படும் ஒற்­று­மை­யீ­னமே காரணம் எனவும் சுட்­டிக்­காட்­டினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று உள்­ளூ­ராட்சி அதி­கா­ர­ச­பைகள் விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தின் மீதான விவா­தத்தில் பதி­ல­ளித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், முல்­லை­த்தீவு மாவட்­டத்தில் புதுக்­கு­டி­யி­ருப்பு, கரைது­றைப்பற்று பிர­தேச சபை­க­ளுக்­கான தேர்தல்

ரஷ்யாவின் போர்க் கப்பல் வேண்டாம் – ஜனாதிபதியின் மைத்துனர் எச்சரிக்கை

Posted by - November 8, 2017

நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வது மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று, இலங்கை இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவரான ரொஹான் பல்லேவத்த எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மைத்துனரான பல்லேவத்த, இலங்கை இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றிய போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் போர் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்ட நிலையில் அதிக விலைகொண்ட