இலஞ்சம் மற்றும் ஊழல் சட்டத்தில் திருத்தம்

310 0

இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலினை இல்லாதொழிப்பதற்காக காணப்படுகின்ற சட்ட திட்டங்களை காலத்திற்கு ஏற்றால் போல் திருத்தியமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி தற்போது காணப்படுகின்ற சட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை பரிசீலிக்கும் ஆணைக்குழு சட்டம் மற்றும் அதனுடன் தொடர்பான சட்டங்களை திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment