கருணாநிதியின் சூழ்ச்சியை முறியடிக்கவே அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார் என்று செல்லூர் ராஜு தெரிவித்த கருத்துக்கு மா. சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சூழ்ச்சியை முறியடிக்கவே அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்த கருத்துக்கு தி.மு.க. எம்எல்.ஏ. மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுக்கு இப்படி ஒரு அதீத கற்பனை எப்படி வந்தது என்று தெரியவில்லை. சசிகலாவுக்கு பொதுமக்கள் மத்தியிலும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியிலும்