தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து, அதிகாரப் பகிர்வை பெறவேண்டிய தேவையுள்ளது- நஸீர் அஹமட் (காணொளி)

Posted by - January 16, 2017

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து, அதிகாரப் பகிர்வை பெறவேண்டிய தேவையுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஜனாதிபதியின் மட்டக்களப்பிற்கான விஜயம் தொடர்பில், காத்தான்குடியில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும்போதே, கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ், முஸ்லிம் மக்கள் சரியான புரிந்துணர்வுடன் ஒவ்வொரு சமூகத்தினுடைய கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்காத வகையில் பிரச்சினைகளை பேசித்தீர்ப்பதன் மூலமாக மாத்திரமேதான், உண்மையான நிரந்தரமான தீர்வை தாங்கள் அடையமுடியும் எனவும் அவர் நம்பிக்கை

சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்களும், பெற்றோர்களும் இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 16, 2017

  கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்களும், பெற்றோர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி சிவகநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரியும், குறித்த பாடசாலையின் பெற்றோர்களும், மாணவர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கணிதம், விஞ்ஞானம், நடனம், உடற்கல்வி ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்று ஆறுமாதங்கள் கடந்த போதிலும், இதுவரை அந்த வெற்றிடங்கள் நிரப்படவில்லை என்றும், இந்நிலையில் அதிபருக்கும் இடமாற்றம்

நாடு முழுவதும் இயங்கி வருகின்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளின் செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் (காணொளி)

Posted by - January 16, 2017

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் இயங்கி வருகின்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளின் செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்தி, அரச பல்கலைக்கழகங்களினூடாக மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையினை அடிப்படையாகக் கொண்டு வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தொடற்சியாக ஒரு வாரகாலம் வகுப்பை புறக்கணிக்கவுள்ளதாகவும், மக்கள் மத்தியிலும், அரசாங்கத்திற்கும், தனியார் மருத்துவக்கல்லூரியின் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வினை எற்படுத்தவுள்ளதாகவும்

கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 16, 2017

கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகளை பல்கலைகழக நிர்வாகம் மறுத்து வருவதைக் கண்டித்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பல்கலைகழகத்திலுள்ள பொலிஸ் நிலையத்தை அகற்ற வேண்டும், மாணவர்களின் மாதாந்தக் கொடுப்பனவுப் பிரச்சினைக்கு உடன் தீர்வைப் பெற்றுதரவேண்டும், உபவேந்தர், அரசின் கைப் பொம்மையா?, சீ.சீ.ரி.வி கமரா அகற்றப்பட வேண்டும், புலனாய்வாளர்கள் பல்கலைகத்தினுள் நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும், மாணவர்கள் விடுதலைப்

வவுனியா ஏ-9 கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 16, 2017

வவுனியா ஏ-9 கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேரூந்து நிலையத்தை, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று திறந்து வைத்தார். மத்திய அராங்கத்தினால் 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உள்ளுர் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தை மேற்கொள்கின்ற பேரூந்துக்களுக்கான பிரதான தரிப்பிடமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பேரூந்துத் தரிப்பிடத்தில் 13 பேரூந்துகள் மாகாணங்களுக்கிடையிலான சேவையிலும், 21 பேரூந்துகள் உள்ளுர் சேவையிலும் ஈடுபடக்கூடிய வகையில் தரிக்கப்படவுள்ளன. குறித்த பேரூந்து நிலையம்,

திருச்சி முதியோர் இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடிய ஈழத்தமிழ் இளைஞர்கள்!

Posted by - January 16, 2017

திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத் தமிழ் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முதியோர் இல்லமொன்றில் தை பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள்.திருச்சி விமான நிலையப் பகுதியில் அமைந்துள்ள அன்னை ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பாட்டிகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளார்கள் ஈழத் தமிழ் இளைஞர்கள்.காலை 9 மணியளவில் முதியோர் இல்லத்தில் ஒன்றுகூடிய ஈழத் தமிழ் இளைஞர்களுடன் அங்கிருந்த பாட்டிமாரும் இணைந்து பொங்கல் ஏற்பாடுகளை செய்தார்கள். பொங்கல் வைக்கும் அடுப்பை ஈழத் தமிழ் இளைஞர்கள் தயார் செய்த போது அங்கிருந்த பாட்டியொருவர் அடுப்பை

ஜல்லிக்கட்டு: வீரமா? விளையாட்டா? – புகழேந்தி தங்கராஜ்!

Posted by - January 16, 2017

சமூகவலைத்தளத் தொடர்புகள் மூலம் சுமார் 25 ஆயிரம் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக சென்னையில் திரண்டதுதான் இந்த வாரத்தின் ஹாட் டாபிக். தமிழகக் காவல்துறையோ மத்திய அரசின் உளவுத்துறையோ இப்படியொரு திடீர் எழுச்சியை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதுகுறித்து தமிழ் ஹிந்து நாளேட்டில் வெளியாகியுள்ள வா.மணிகண்டன் என்கிற நண்பரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. ‘தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனநிலை கொண்டவன் நான். ஆனால் சமீபமாக எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாத எமது தமிழ்ச் சமூகத்தை அது அணிதிரளச் செய்யுமாயின்

மட்டக்களப்பில் எதிர்வரும் 21 திகதி நடைபெறப்போகும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு கிழக்கு பல்காலைக்கழக மாணவ சமூகம் முழு ஆதரவு

Posted by - January 16, 2017

“எழுக தமிழ்” எழுச்சிப்பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன…! கிழக்குத் தமிழ் உறவுகளே ஒன்று சேருங்கள்!! பேரினவாதம் என்பது ஒரு நூற்றாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு கட்டமைப்புரீதியான இனவழிப்புவாதமாக வளர்ந்து நிற்கின்றது. இராணுவமயப்படுத்தலும் சிங்கள குடியேற்றங்களினால் சிங்களமயமாக்கலும்; புத்த சமய சின்னங்களின் பரம்பலினால் பௌத்தமயமாக்கலும்; பொருளாதாரச் சுரண்டல்களும் சூறையாடல்களும் தமிழர் நில ஆக்கிரமிப்புகளும் தாராளமாகவே தமிழ்ப் பேசும் மக்களிடத்திலும் வாழ்விடங்களிலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன இந்த மண்ணின் பூர்வகுடி மக்களான நாம் நமது இருப்பையும் பண்பாடடையும் இன அடையாளங்களையும்

பிரான்சில் உள்ள 64 தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை 15.01.2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடியது.

Posted by - January 16, 2017

பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான சென்ரனி பிரதேச மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு மங்கள நாதஸ்வரம் இசைக்க பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு. பாலன் அவர்களும், தமிழ்ச்சோலை தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமாரன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களும், மற்றும் செவினி சூ றோஸ் மாநகரசபை ஆலோசகரும், தமிழின உணர்வாளருமாகிய பிரெஞ்சு நாட்டவரான திரு. டேவிட் பாபிறே அவர்களும், அவரின் உதவியாளர் உட்பட பிரான்சு மூதாளர் இல்லத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் தமிழர்

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Posted by - January 16, 2017

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாய்மண்ணின் நினைவுடன் வங்கத்திலே தீயுடன் சங்கமித்த வேங்கைகள்… கேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) லெப்.கேணல் குட்டிசிறி (இராசையா சிறிகணேசன் – சுதுமலை வடக்கு, மானிப்பாய்) மேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல்