கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

340 0

uniகிழக்குப் பல்கலைக்கழகத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகளை பல்கலைகழக நிர்வாகம் மறுத்து வருவதைக் கண்டித்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பல்கலைகழகத்திலுள்ள பொலிஸ் நிலையத்தை அகற்ற வேண்டும், மாணவர்களின் மாதாந்தக் கொடுப்பனவுப் பிரச்சினைக்கு உடன் தீர்வைப் பெற்றுதரவேண்டும், உபவேந்தர், அரசின் கைப் பொம்மையா?, சீ.சீ.ரி.வி கமரா அகற்றப்பட வேண்டும், புலனாய்வாளர்கள் பல்கலைகத்தினுள் நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும், மாணவர்கள் விடுதலைப் புலிகளோ, பயங்கரவாத அமைப்போ அல்லர் போன்ற கோசங்களை இதன்போது முன்வைத்தனர்.

கிழக்கு பல்கலைகழக வந்தாறுமூலை விடுதி வளாகத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடம் வரை சென்றடைந்து அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.