நாடு முழுவதும் இயங்கி வருகின்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளின் செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் (காணொளி)

365 0

jaffna uniயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இயங்கி வருகின்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளின் செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்தி, அரச பல்கலைக்கழகங்களினூடாக மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையினை அடிப்படையாகக் கொண்டு வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தொடற்சியாக ஒரு வாரகாலம் வகுப்பை புறக்கணிக்கவுள்ளதாகவும், மக்கள் மத்தியிலும், அரசாங்கத்திற்கும், தனியார் மருத்துவக்கல்லூரியின் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வினை எற்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இன்றைய வகுப்பு புறக்கணிப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் 150 பேர் வரை கலந்து கொண்டனர்.