தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து, அதிகாரப் பகிர்வை பெறவேண்டிய தேவையுள்ளது- நஸீர் அஹமட் (காணொளி)

378 0

 

east cmதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து, அதிகாரப் பகிர்வை பெறவேண்டிய தேவையுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மட்டக்களப்பிற்கான விஜயம் தொடர்பில், காத்தான்குடியில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும்போதே, கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ், முஸ்லிம் மக்கள் சரியான புரிந்துணர்வுடன் ஒவ்வொரு சமூகத்தினுடைய கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்காத வகையில் பிரச்சினைகளை பேசித்தீர்ப்பதன் மூலமாக மாத்திரமேதான், உண்மையான நிரந்தரமான தீர்வை தாங்கள் அடையமுடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் தலைமையில், ஜனாதிபதி மைத்திரிபால

சிறிசேனவின் மட்டக்களப்பு வருகை தொடர்பான கலந்துரையாடலொன்று, நேற்று மாலை காத்தான்குடியில் நடைபெற்றது.

காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ அசீஸ் உட்பட பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் பல தனியார் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முதலமைச்சரின் பங்களிப்புடன் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு பேரணி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.