மட்டக்களப்பில் எதிர்வரும் 21 திகதி நடைபெறப்போகும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு கிழக்கு பல்காலைக்கழக மாணவ சமூகம் முழு ஆதரவு

358 0


“எழுக தமிழ்” எழுச்சிப்பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன…! கிழக்குத் தமிழ் உறவுகளே ஒன்று சேருங்கள்!!

பேரினவாதம் என்பது ஒரு நூற்றாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு கட்டமைப்புரீதியான இனவழிப்புவாதமாக வளர்ந்து நிற்கின்றது.

இராணுவமயப்படுத்தலும் சிங்கள குடியேற்றங்களினால் சிங்களமயமாக்கலும்; புத்த சமய சின்னங்களின் பரம்பலினால் பௌத்தமயமாக்கலும்; பொருளாதாரச் சுரண்டல்களும் சூறையாடல்களும் தமிழர் நில ஆக்கிரமிப்புகளும் தாராளமாகவே
தமிழ்ப் பேசும் மக்களிடத்திலும் வாழ்விடங்களிலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன இந்த மண்ணின் பூர்வகுடி மக்களான நாம் நமது இருப்பையும் பண்பாடடையும் இன அடையாளங்களையும் தக்கவைத்து கொள்வதர்க்காகவும் எதிர்காலத்தில் தமிழினம்
தனது அபிலாசைகளை வென்றெடுக்கவும்… துரோகத்தால் வீழ்ந்து போன வீரத்தின் விளை நிலமே கிழக்கே ‘எழுக தமிழ்’ முழக்கத்துடன் விளித்துக்கொள்.

ஏழுக தமிழின் வெற்றிக்கு எங்கள் உரிமைக் குரலை பலப்படுத்துவோம் அலை அலையாக ஒன்றாக அணி திரள்வோம். எத்தனை அடக்குமுறை செய்தாலும் எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தமது
உணர்வுகளை ஒருபோதும் இழக்கமாட்டார்கள் என்பதை சிங்கள பெளத்த தேசியவாதத்தினூடாக கட்டிய எழுப்பிய சிங்கள பெளத்தப் பேரினவாதத்திற்கும் சர்வதேசத்திற்கும் உண்மையை உரக்கச்சொல்வோம்.

மக்களுக்குள் இருந்து மக்களுக்காக போராடும் குணம் மேலோங்கினால் மட்டுமே மக்களுக்கு நன்மைகள் நிகழும்.
“தமிழர்களே சிந்தியுங்கள் !!” தமிழினமே நீ எளிர்ச்சிக்கும் புரட்ச்சிக்கும் தலைதுக்கவிலை எனில் நவின உலகு உன்னை தடம் இல்லாது அழித்துவிடும். இனப்படுகொலைகள் செய்யப்பட்ட எங்கள் ஒவ்வொரு உறவுகளையும்
நெஞ்சில் நிறுத்தி கிழக்கே அலையாக எழுக தமிழினமே! எழுக !

– ஈழத்து நிலவன் –