எழுக தமிழ், யாழிலிருந்து மட்டு நகருக்கு! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - January 19, 2017

வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையாய் உள்ளுக்குள் குமுறிக் கொண்டுதான் இருக்கிறது இலங்கை. பொத்தாம்பொதுவாக ‘இலங்கை’ என்று குறிப்பிடுவதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. தமிழர்கள் மட்டுமில்லைஇ சிங்கள மக்களும் அங்கே நிம்மதியாய் இல்லை. போரில் தோற்றதாகச் சொல்லப்பட்டவர்களை விட வெற்றிபெற்றதாக அறிவித்துக் கொண்டவர்கள்தான் அதிக பதற்றத்தில் இருக்கின்றனர். ஒருபுறம் 2009 இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட – சீரழிக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நீதிபெற்றே தீர்வது என்கிற தமிழினத்தின் ஓர்மம் மேலும் மேலும் கூர்மையடைந்துகொண்டே போகிறது. இன்னொரு புறம் சிங்களச் சிப்பாய்களும் ராணுவ

மண்டைதீவு பகுதியில் மிக பிரம்மாண்டமான கிரிக்கட் மைதானம்

Posted by - January 19, 2017

யாழ்ப்பாணம் -மண்டைதீவு பகுதியில் மிக பிரம்மாண்டமான கிரிக்கட் மைதானம் ஒன்று அமைக்க தீர்மானித்துள்ளதாகவும், இந்த திட்டம் நிறைவேறும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கையுள்ளது எனவும் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் வடக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வன்னி, மன்னார் போன்ற பிரதேசங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக யாழ்ப்பாணம்

அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது- அஜித் மான்னப்பெரும

Posted by - January 19, 2017

நாட்டின் வரி வருமானத்தை பலன்தரும் வகையில் மக்களிடம் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் இலக்கு என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் வரிப்பணத்தை எப்படி பாதுகாப்பது என்பதை நாம் தேடிப்பார்க்க வேண்டும். அந்த பணம் அரசியல்வாதிகளின் பைகளுக்குள் செல்லாது, மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும். எமது அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை

வீதி விளக்குகள் எரிய விடுவது ஒரு மணி நேரத்தினால் தாமதிக்கும்- மின்சார சபை

Posted by - January 19, 2017

எதிர்காலத்தில் ஏற்படப் போகும் மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வாக வீதி விளக்குகள் எரிய விடுவதை ஒரு மணி நேரத்தினால் தாமதப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை சகல நகர சபைகளுக்கு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மின்வலு எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட இதனை அறிவித்துள்ளார். இதனடிப்படையில், தற்போது மாலை 5.30க்கு எரிய விடப்படும் மின் விளக்குகள் நாளைய தினம் முதல் மாலை 6.30க்கு எரியவிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை

மாநாட்டில் விமல் வீரவங்சவுக்கு பதிலாக மகிந்த பிரதான உரை

Posted by - January 19, 2017

எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள வீமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் விசேட மாநாட்டில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவிருப்பதாக தெரியவந்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், மாநாட்டில் பிரதான உரையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிகழ்த்தவுள்ளார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அன்றைய தினத்தில் மேற்கொள்ளவிருந்த பல வேலைகளை இரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இனவாத முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் – எம்.எம். சுஹைர்

Posted by - January 19, 2017

இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் இனவாதம் மற்றும் மதாவதத்தை அனுமதிக்காதபோதும், மிகவும் சொற்பமான தொகையினர் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டி, மக்களை பிரித்து விடுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தெரிவித்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு, கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; ‘இவர்களின் இந்த முயற்சியை நாம் தோற்கடிக்க வேண்டும்,

ஈழத்தில் புத்தரின் படையெடுப்பு- தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பு கிளிநொச்சியில் போராட்டம்

Posted by - January 19, 2017

இந்தியாவின் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், பிற்பகல் நான்கு மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்போது வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும், ஈழத்தில் புத்தரின் படையெடுப்பு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பு, மோடி அரசே பேடி அரசே, அழிக்காதே அழிக்காதே தமிழர் பண்பாட்டை அழிக்காதே, நீ ஒடுக்குவது விளையாட்டை மாத்திரமல்ல, ஜல்லிக்

அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 19, 2017

ரகர் வீரர் வசிம் தாஜூடினின் கொலை வழக்கு தொடர்பான வழக்கு இன்றையதினம் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட்டது. தாஜூடின் கொலை தொடர்பில் சாட்சியங்களை மறைத்த சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹன்பிட்டிய பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவின்முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை அடுத்த மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறுகொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை,வசிம் தாஜூடினின் கொலை இடம்பெற்ற போது அவரது வாகனத்தின் பின்இருக்கையில் சென்ற நபர்

கூட்டு எதிர்க்கட்சி பகல் கனவு காண்கின்றது- திலிப் வெதஆராச்சி

Posted by - January 19, 2017

கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பகல் கனவை கண்டுக்கொண்டிருப்பதாகவும் தலைகளை மாற்றினாலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும் மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு பல பாரிய நிவாரணங்கள் கிடைத்தன. மீன்பிடி தொழிலை மேம்படுத்தி, மீனவர்களின் உரிமைகளை பாதுகாத்து, மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பல்வேறு கொலைகளுடன் தொடர்புயை ஆறு சந்தேகநபர்கள் ஆயுதங்களுடன் கைது

Posted by - January 19, 2017

பல்வேறு கொலைகளுடன் தொடர்புயை 6 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து டீ 56 ரக மூன்று துப்பாக்கிகள் , மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் அதற்கான ரவைகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை கொலை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த வருடம் எல்பிடிய , அம்பலாங்கொடை, காலி மற்றும் மீடியாகொட போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்பிடிய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்