இந்தியாவின் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், பிற்பகல் நான்கு மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன்போது வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும், ஈழத்தில் புத்தரின் படையெடுப்பு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பு, மோடி அரசே பேடி அரசே, அழிக்காதே அழிக்காதே தமிழர் பண்பாட்டை அழிக்காதே, நீ ஒடுக்குவது விளையாட்டை மாத்திரமல்ல, ஜல்லிக் கட்டை நடத்தவிடு இல்லையேல் தமிழ்நாட்டை பிரித்துவிடு, இந்திய அரசே ஈழத்தில் மனிதர்கள் கொல்லப்பட்ட போது எங்கே இருந்தாய், தமிழகத்திற்காக ஈழம் ஈழத்திற்காக தமிழகம், இந்திய ராஜபக்சவே நாம் சிந்திய இரத்தம் போதாதா போன்ற கோசங்களை எழுப்பியவாறும், பாதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.