தமிழக ஆறுகளில் தடுப்பணை கட்டும் ஆந்திரா-கேரளாவை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்

Posted by - February 4, 2017

தமிழக ஆறுகளில் தடுப்பணை கட்டும் ஆந்திரா-கேரளாவை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார்: இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு

Posted by - February 4, 2017

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவை அறிவிப்பேன் என்று தீபா தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் – இதுவரை 895 காளைகள் பதிவு

Posted by - February 4, 2017

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படியும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் நாளை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு நடத்தப்பட உள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் நல்ல உடல்நலத்துடனும், பாதுகாப்புடனும் உள்ளனவா என கால்நடை பராமரிப்புத்துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு முறையாக பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அவனியாபுரத்தில் நாளை நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் முழுவீச்சில் செய்து வருகின்றனர். இதற்காக அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள குருநாதன் கோவில்

இலங்கை தமிழர்கள் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை

Posted by - February 4, 2017

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). லண்டன் சென்ற அவர் அங்கு இலங்கை தமிழர்களான முகமது இம்ரான் (32), சுகனந்தன் (32), முரளிதரன் (44), பிரகாஷ் (25), சந்திரமோகன் (34) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. போலியான ஏ.டி.எம். அட்டைகளை அவர்கள் தயாரித்து 2014-ம் ஆண்டு சென்னை வந்தனர். சென்னை ஏ.டி.எம். மையத்தில் போலி ஏ.டி.எம். அட்டைகளை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இது தொடர்பான வழக்கில் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 6

விண்வெளி ஆராய்ச்சியில் 7 ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது – இஸ்ரோ விஞ்ஞானி தகவல்

Posted by - February 4, 2017

திருச்சி ஜோசப் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் உலக கணினி பயன்பாடு தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் பற்றிய சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனரும் இஸ்ரோவின் செவ்வாய் கிரக திட்ட ஒருங்கிணைப்பாளருமான குன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார். இஸ்ரோ இதுவரை 56 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மட்டும் 9 முறை செயற்கைகோள்கள் ஏவப்பட்டு

காதலர் தினம் – வெளிநாடுகளுக்கு விமானத்தில் 4 கோடி ஓசூர் ரோஜாக்கள்

Posted by - February 4, 2017

உலகம் முழுவதும் வாழும் காதலர்களால் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தில், காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை வழங்கி அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம். இதில் ரோஜாப்பூக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரோஜாக்கள் உலக அளவில் புகழ் பெற்றவையாகும். ஓசூரில் உள்ள மண் வளம் மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக அதிக அளவில் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம்

கடலில் எண்ணெய் கசிவு – மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

Posted by - February 4, 2017

சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கடந்த 27ஆம் திகதி நள்ளிரவு ஈரான் நாட்டு கப்பல் வெளியேறியபோது சரக்கு கப்பல் மீது மோதியது. சேதம் அடைந்த சரக்கு கப்பலில் இருந்து டீசல் கடலில் கொட்டியது. சென்னையையொட்டி உள்ள கடற்பரப்பில் எண்ணெய் மிதந்தது. திருவொற்றியூர் பாரதியார் நகர் அருகே கடல்பகுதியில் அதிகளவு எண்ணெய் படிந்து இருக்கிறது. அதை அகற்றும் பணி கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது. திருவொற்றியூர் பாரதி நகரில் கடலில் பரவிய எண்ணெய் அகற்றும் பணியை

7 நாட்டு முஸ்லிம்கள் நுழைய அனுமதி மறுப்பு – டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் தடை விதித்தது கோர்ட்

Posted by - February 4, 2017

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் ஈரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் விசா தடை விதித்தார். மேலும் சிரியா அகதிகள் நுழைய நிரந்தர தடை விதித்தார். இது அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி

இலங்கையை கௌரவித்தது கூகுள்

Posted by - February 4, 2017

இன்று கொண்டாடப்படுகின்ற இலங்கையில் 69ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கூகுள் நிறுவனமும் இலங்கையைக் கௌரவித்துள்ளது. இதற்கமைய, இலங்கையின் தேசியக் கொடியைப் பதிவு செய்து, கூகுளின் முகப்பு பக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணி பெண் கொலை – சாட்சியங்களை விசாரிக்க உத்தரவு

Posted by - February 4, 2017

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு உள்ள இரண்டு சந்தேகநபர்களும் கொலை நடந்த சமயம் பிறிதொரு இடத்தில் நின்றதாக சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, ‘நகர்த்தல் பத்திரம்’ தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் குறித்த வழக்கினை, நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இதன்போது சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, சந்தேகநபர்களில் ஒருவர் கொலை நடந்த சமயம் மருதனார்மடத்தில்