யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி(காணொளி)

Posted by - February 8, 2017

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில், கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த விளையாட்டுப் போட்டியில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.தெய்வேந்திரராஜா கலந்து சிறப்பித்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டியில், மஞ்சள், பச்சை, நாவல், பிறவுண், நீலம் ஆகிய நிறங்களிலுள்ள இல்லங்களிலிருந்து மாணவர்கள் போட்டியில் பங்கு பற்றினர். குறித்த போட்டியில் முதலாம் இடத்தை மஞ்சள் இல்லமும், இரண்டாம் இடத்தை நீல இல்லமும்,

யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையினரால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - February 8, 2017

  அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய முடியாது என்பதை வெளிப்படுத்தி யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையினரால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டது. குறித்த கவனயீர்ப்புப் போராட்டமானது யாழ்ப்பாணம் கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றது. இதன்போது பல்வேறு சுலோக அட்டைகளையும் தாங்கியபடி, யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையினர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், முகாமையாளர்கள், நெறியாளர் சபையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து

யாழ் நல்லிணக்கபுர  வீட்டுதிட்டத்தில் நாங்களாக விரும்பி குடியேறவில்லை மக்கள் தெரிவிப்பு

Posted by - February 8, 2017

கீரிமலையில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியுடன் இராணுவத்தினரால் அமைத்து கொடுக்கப்பட்ட வீட்டு திட்டத்தில் நாங்கள் விரும்பி நல்லிணக்கபுரத்தில் குடியேறவில்லை வெளிநாடுகளுக்கு இங்கு முகாம்கள் எதுவும் இல்லை என்பதை வெளிக் காட்டுவதற்கே அரசு அவசரமாக மீள் குடியேற்றியது என நல்லிணக்கபுர கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த அரசுக்கு மீள் குடியேற்றம் தொடர்பாக விளக்கம் இல்லையா?ஒரு இடத்தில மக்களை குடியேற்றப் போகின்றார்கள் என்றால் முதலில் அந்த இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.அதன் பின்னர் அந்த சூழலை பாதுகாக்குக்கு உகந்ததா மக்கள்

உலகை அச்சுறுத்தும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிய விழிப்புணர்வு சுவரொட்டிகளும் பிரசுரங்களும்

Posted by - February 8, 2017

உலகை அச்சுறுத்தும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  ராபிதது அஹ்லிஸ் ஸுன்னா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான பரவலான சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் உட்பட கிழக்கு மாகாணத்தின் பல முஸ்லிம் பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன. அதேவேளை துண்டுப் பிரசுரங்களும் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுளூ  உலகை அச்சுறுத்தும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும், இஸ்லாமும் தீவிரவாதமும், இஸ்லாத்தின் பார்வையில் ஐஎஸ் ஐஎஸ், ஐஎஸ் ஐஎஸ் தொடர்பாக சந்தேகங்களும் பதில்களும்

ஆறாவது நாளாக தீர்வற்று தொடரும் புதுக்குடியிருப்பு நில மீட்பு போராட்டம்

Posted by - February 8, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் நகரப்பகுதியில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு வலியுறுத்தியும் கேப்பாபிலவு  பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னாள்  பொதுமக்கள் முன்னெடுக்கும் போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது. புதுக்குடியிருப்பு பிரதேசசெயலத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தமது சொந்த காணிகளிற்குள் கால் பதிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு கலைஞர் கழகம், விளையாட்டு கழகம், மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் உள்ளிட்ட

மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்

Posted by - February 8, 2017

மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ரஞ்சன் ராமநாயக்க ஊடகமொன்று தெரிவித்துள்ளார். சட்டவிரோத மண் வர்த்தகத்தில் ஈடுபடும் தரப்பினர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்விரோத மண் அகழ்விற்கு எதிராக போராடி வரும் தமக்கு பாதாள உலகக் குழுவினரைக் கொண்டு இந்த வர்த்தகர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் எனவும் இது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார். எனினும் சட்டவிரோத

ஐக்கிய நாடுகள் குழுவின் கூட்டத்தொடரில், இலங்கை பெண்களின் உரிமைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்படவுள்ளது

Posted by - February 8, 2017

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் கூட்டத்தொடரில், இலங்கை பெண்களின் உரிமைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்படவுள்ளது. பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும், பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை, ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை, உக்ரேன், அயர்லாந்து, ஜோர்தான், எல்சால்வடோர், ஜேர்மனி, ருவாண்டா, மைக்ரோனேசியா ஆகிய நாடுகளில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக மீளாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்நிலையில்

சிவப்பு நாடு நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொசசியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் தொடர்புகொள்ளவும்- அரசாங்க அதிபர்

Posted by - February 8, 2017

சிவப்பு நாடு நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொசசியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் தொடர்புகொள்ளமாறு யாழப்பாண .மாவட் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். 2014ஆம், 2015ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டு பெரும்போகங்களில் நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள சிவப்பு நாடு நெல் 49ரூபா 25 சதத்திற்கு விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொச்சியில் உள்ள நெல் சந்தைப்படுத்தல் பிராந்திய காரியலயத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் கொழும்பு

பெண் தலைமைத்துவக் குடும்பத்தின் வீட்டுக்கு விசமிகளால் தீ வைப்பு

Posted by - February 8, 2017

முல்லைத்தீவு, மூங்கிலாறுப் பகுதியிலில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வீட்டுக்கு, விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் குடும்ப உறுப்பினர்கள், அருகிலுள்ள அவர்களின் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவுநேரத்தில் தங்குவது வழமை. சம்பவ தினமான, திங்கட்கிழமை இரவும், உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, இவர்களின் வீட்டுக்கு, இனந்தெரியாதோர் தீ வைத்துள்ளனர். இதனால் வீடு, தீயில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனிடம், குறித்த பெண் தலைமை குடும்பம்

கேப்பாபுலவு மக்களுடன் கைகோர்த்த சிங்கள மக்கள்..! வலுபெறும் காணிவிடுவிப்பு போராட்டம்

Posted by - February 8, 2017

தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராடத்திற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு சிங்கள மக்களும் ஆதரவை தெரிவித்துள்ளனர். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் , பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாந்து ஆகியோர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். அத்துடன், தென்னிலங்கையில் உள்ள மக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து,