யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையினரால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

424 0

 

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய முடியாது என்பதை வெளிப்படுத்தி யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையினரால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டது.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டமானது யாழ்ப்பாணம் கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றது.

இதன்போது பல்வேறு சுலோக அட்டைகளையும் தாங்கியபடி, யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையினர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், முகாமையாளர்கள், நெறியாளர் சபையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.