அக்கரைப்பற்று பகுதியில் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த புகையிலைத்தூள் மூடைகளை மதுவரித்திணைக்களத்தினர் கைப்பற்றினர்(காணொளி)
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த புகையிலைத்தூள் மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு, தபாலக வீதியில் இந்தியாவின் ஒடிசா பகுதியில் இருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரனின் வழிகாட்டலில், கல்முனை பிரதேச பிரதான பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையில், மதுவரித்திணைக்கள பரிசோதகர்களான பி.செல்வகுமார், கே.வாசன், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்களான எஸ்.குகனேசன், எஸ்.ஜனானந்தா, கே.செந்தில்வர்ணன், எஸ்.செல்வராஜா, கே.ரஜனிகாந்த், தனஞ்செயன் ஆகியோர் கொண்ட குழுவினர்

