மட்டக்களப்பில் பொலிஸாரின் வாகனம் மோதியதில், யுவதிகள் இருவர் படுகாயம்(காணொளி)

317 0

மட்டக்களப்பில் நேற்று  பொலிஸாரின் வாகனம் மோதியதில், யுவதிகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு நகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு யுவதிகள் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில், பொலிஸ் விடுதிக் கட்டடத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், எதிரே வந்த இரண்டு யுவதிகள் மீது பொலிஸாரின் வாகனம் மோதியன் காரணமாக, குறித்த யுவதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், வாகனத்தைச் செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர்கள் இரு யுவதிகளும் வவுணதீவு பாவக்கொடிச்சேனை கிராம பகுதியை சேர்ந்த யுவதிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சி பதிவுகளைக்கொண்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.