எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கைகள்(காணொளி)

318 0

 

எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கைகள் நேற்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் குறித்த துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் எழுக தமிழ் இணைத்தலைவர் வசந்தராஜா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்; தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் உட்பட ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகம், தனியார் வர்த்தக நிலையங்கள், வீடுகள், பொது நிறுவனங்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், எழுக தமிழ் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன