யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் பலி

Posted by - February 9, 2017

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் மற்றும் ஒரு இராணுவ வீரர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,   அரியாலை பகுதியில் இயங்கி வரும் இராணுவ முகாமில் இருந்து ஜீப் வண்டி மூலம் இரணுவ வீரர் இருவர் பயணம் செய்துள்ளனர். ஜீப் வண்டி மூலம் புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளனர். இதன்போது புகையிரதம் மோதி

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல்

Posted by - February 9, 2017

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. காணாமல்போனோரின் உறவினர்கள், கடந்த மாதம் வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் போனோரது பட்டியலை வெளியிடுமாறும், காணாமல் போனோரின் உறவினர்கள், தங்களது பிள்ளைகளின் நிலையை அறிய வேண்டும் எனவும் வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, வவுனியாவுக்குச் சென்ற பாதுகாப்பு இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, இன்று பிரதமருடனான சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்துதருவதாக உண்ணாவிரதம் மேற்கொண்ட

கிழக்கின் உணர்வுகளை புரிதலிலேயே தாயக விடுதலைதங்கியிருக்கிறது

Posted by - February 9, 2017

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ? வெள்ளைநிறப்பூலுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது! – விபுலானந்தர் ஒரு மண்ணின் மாண்பு ,  மொழியின் அடியாழம் ,அதன் பழக்கவழக்கங்கள், உயரிய பண்புகள், இழப்புகள், ஈகைகள் எதுவென்றாலும், அதன் உண்மையின் உள்ளடக்கம் அம்மண் மாந்தரின் தொன்ம வாழ்வியலிருந்து வெளிப்படும் இலக்கியங்களில் எதிரொளி(லி)க்கும். மேற்சொன்ன பாடலின் வரிகள்  வெறும் வரிகள் அன்று. கடவுள் என்றாலும் மனிதன் என்றாலும் அந்த அன்பு உள்ளன்பு அவ்வளவுதான். வேறெந்த பொய்யான,

எனது ஜாதகத்தில் மரண கண்டம் எதுவும் கிடையாது!-மஹிந்த அமரவீர

Posted by - February 9, 2017

அமைச்சரவை மாற்றம் குறித்து ஊடகங்களே பிரச்சாரம் செய்து வருவதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் மூளைக் குழப்பம் தொடர்பில் எஸ்.பிக்கு ஏற்பட்ட சந்தேகம்!

Posted by - February 9, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூளையை பரிசோதனையிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த அரசுக்கும், மைத்திரி அரசுக்கும் வேறுபாடுகள் இல்லை..!

Posted by - February 9, 2017

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டுமாயின் வர்த்தமானி அறிவிப்பு தேவை!

Posted by - February 9, 2017

ஆடுகளத்தை வழங்கினால் போட்டியை நடத்தத் தயார் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் பிழையான செய்தி வெளியிடப்படுவதாக பிரதமர் ரணில் , சபாநாயகரிடம் முறைப்பாடு!

Posted by - February 9, 2017

ஊடகங்களில் பிழையான செய்தி வெளியிடப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியாவில் வடக்கு மாகாண வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்களால் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - February 9, 2017

வடக்கு மாகாண வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்களால் வவுனியாவில் நேற்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது வடக்கு மாகாண வைத்தியர்கள், மருத்துவ பீட மாணவர்கள் ஒன்றினைந்து  நேற்று  பிற்பகல் வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிலிருந்து, பேரணியாக இலுப்பையடி, பசார் வீதி, வழியாக மத்திய பேரூந்து நிலையம் வரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் ஊடாக நீதிமன்றம் வீதிவழியாகச் சென்று வைத்தியாசலையைச் சென்றடைந்தனர். கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக

கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முக்கிய சந்திப்பு(காணொளி)

Posted by - February 9, 2017

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த 9 தினங்களாக முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டம் நடாத்திவரும் நிலையில், இவ்விடயம் தொடர்பாக இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்துகொள்வதற்காக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐந்து பேர் கொழும்புக்கு பயணமாகியுள்ளனர். எனினும் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு