வடக்கு மாகாண வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்களால் வவுனியாவில் நேற்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது
வடக்கு மாகாண வைத்தியர்கள், மருத்துவ பீட மாணவர்கள் ஒன்றினைந்து நேற்று பிற்பகல் வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிலிருந்து, பேரணியாக இலுப்பையடி, பசார் வீதி, வழியாக மத்திய பேரூந்து நிலையம் வரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் ஊடாக நீதிமன்றம் வீதிவழியாகச் சென்று வைத்தியாசலையைச் சென்றடைந்தனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
கவனயீர்ப்புப் போராட்டத்தில் வைத்தியர்கள் தமது உடையில் கறுப்புப்பட்டி அணிந்தபடி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதன்போது, நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா?
போலி சைட்டம் வைத்தியர்கள் மிக விரைவில் வவுனியா வைத்தியசாலையில், வைத்தியசாலையின் இதயம் இலங்கை மருத்துவக் கல்லூரியைக் காப்போம்,
போலி பட்டம் விற்கும் சைட்டத்தினை மூடு,
போன்ற வாசங்களை தாங்கியவாறு வைத்தியர்களும், மருத்துவ பீட மாணவர்களும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.