எனது ஜாதகத்தில் மரண கண்டம் எதுவும் கிடையாது!-மஹிந்த அமரவீர

287 0

அமைச்சரவை மாற்றம் குறித்து ஊடகங்களே பிரச்சாரம் செய்து வருவதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த துறையில் உங்கள் தலைமையில் நீங்கள் பங்கேற்கும் இறுதி மாநாடு இதுவாக அமையுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு என்னை கொலை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக எனது ஜாதகத்தில் மரண கண்டம் எதுவும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டால் இந்த துறைக்கு நீங்கள் பொறுப்பாக இருக்க மாட்டீர்கள் அல்லவா? எனவும் கேள்வி எழுப்பட்டுள்ளது.

இப்போதைக்கு அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது. அமைச்சரவை மாற்றம் பற்றி ஊடகங்களே பிரச்சாரம் செய்கின்றனவும் எவ்வாறாயினும் எந்தவொரு நேரத்திலும் நாம் ஆயத்தமாகவே இருக்கின்றோம் என்று அமைச்சல் கூறியுள்ளார்.

இதேவேளை, பாரிய மாற்றம் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? எனவும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அமைச்சர், நீங்கள் என்னிடமிருந்து ஒரு வார்த்தையை பிடுங்க முயற்சிக்கின்றீர்கள். மாற்றம் ஏற்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி அதனைச் செய்வார். நாட்டுக்குத் தேவையானதை ஜனாதிபதி செய்வார். மக்களுக்கு நல்ல விடயங்கள் செய்யப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.