மஹிந்தவின் மூளைக் குழப்பம் தொடர்பில் எஸ்.பிக்கு ஏற்பட்ட சந்தேகம்!

252 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூளையை பரிசோதனையிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரில் கல்வி பயில்வதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பத்து புலமைப் பரிசில்களை வழங்கியிருந்தார் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்திருந்தார்.

இதன்போது ஏன், தற்போது மஹிந்த ராஜபக்ஸ இதனை எதிர்க்கின்றார் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, “எனக்குத் தெரியவில்லை அவரது மூளையில் ஏதேனும் பிரச்சினை உண்டா என்று. மூளையை பரிசோதனை செய்யுமாறு நீங்கள் பத்திரிகையில் எழுதுங்கள்.

அப்போது அவர் பார்ப்பார்,“ மருத்துவர் ஒருவரை நாடுமாறு எழுதுங்கள்” எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.