பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் – டென்மார்க் கார்த்திகை 23.11.2017

Posted by - November 24, 2017

இன்று நாங்கள் தம் உயிர் தந்து எம் உயிர் காத்த மாவீரர் வாரத்தில் பயணிக்கின்றோம். மாவீரர்கள் மகத்தானவர்கள். மரியாதைக்கு உரியவர்கள். தரணி வாழ் தமிழர் உரிமைக்காக தமிழீழ நாட்டிலே தம் உயிரை ஈந்தவர்கள் . ஸ்ரீலங்காவின் சிங்கள பேரினவாத அரசின், தமிழீழ மக்களுக்கெதிரான நீதிக்கு மீறிய இனவழிப்பு அடக்குமுறைக்கெதிராக, விடுதலை வேண்டி போராடி களத்தில் மடிந்த புனிதர்கள். வழமை போன்று இம்முறையும் Århus பல்கலைக்கழகத்தில், டென்மார்க் நாட்டின் மாவீரர் நாள் ஒழுங்கமைப்பு குழுவின் ஆதரவுடன், தமிழ் இளையோர்

பொது இடத்தில் மதுவருந்திய நால்வர் கைது!

Posted by - November 24, 2017

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் பொது இடத்தில் மதுவருந்திய நால்வரை நேற்று மாலை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேரியகுளம் குளத்திற்கு செல்லும் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மதுபானம் அருந்துவதாக வவுனியா நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி எ.ஸ் அத்தனாயக்க தலமையிலான குழுவினர் அந்த இடத்திற்கு சென்று வீதியில் மதுவருந்திய 21, 22, 25, 41 வயதுடைய நால்வரை கைது செய்துள்ளனர். இன்றையதினம் கைது செய்யப்பட்ட  நால்வரையும் வவுனியா நீதிவான்

கேரளா கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபா பணத்துடன் பெண் ஒருவர் கைது

Posted by - November 24, 2017

2 கிலோ கேரளா கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபா பணத்துடன் குடும்ப பெண் ஒருவர் இன்று (24.11) யாழ்.பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியர்சரின் கீழான பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே கைதுசெய்துள்ளனர். 35 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரான என்றும்  2 கிலோ கேரளா கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபா பணமும் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

கருத்துச் சுதந்திரத்தைக் காவு வாங்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்!

Posted by - November 24, 2017

தற்போதைய சூழலில் சமூக ஊடகங்கள் என்பவை கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் புதியதொரு பரிமாணமாக பரந்துசெல்கின்றது. ஊடகவியலாளர்கள் மட்டுமே எழுதலாம்,பேசலாமென்ற எல்லையினை தாண்டி மக்கள் ஒவ்வொருவரும் தங்களது மனதில் தோன்றுவதை வெளிப்படுத்தும் கருத்துச்சுதந்திரத்தை அண்மைக்காலமாக சமூக ஊடகங்கள் தோற்றுவித்து வழங்கிவருகின்றன.

பஷிலின் நாட்காட்டி வழக்கு தடுத்து இடைக்காலத் தடை

Posted by - November 24, 2017

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான நாட்காட்டி வழக்கை விசாரணைக்கு எடுப்பதை தடுக்கும் வகையில் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேல்நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க முன்னிலையில் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் வேறொரு நீதபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு கோரி பஷில் ராஜபக்ஷ் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் , குறித்த மனு இன்று ஆராயப்பட்ட போது இந்த தடையுத்தரவு

புதிய சட்டத்திற்கு அமைய வருமான வரி

Posted by - November 24, 2017

புதிய தேசிய வருமான வரி சட்டத்தின் புதிய சூத்திரத்திற்கமைய வருமான வரி தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். மாத்தறையில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே நிதி அமைச்சர் இதனை தெரிவித்தார். சாதாரண மக்களுக்கு வரிச்சுமையை அதிகரிப்பதை காட்டிலும், அனைவருக்கும் சமமான முறையில் வரி அறவீட்டினை மேற்கொள்ள இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள்

Posted by - November 24, 2017

புலனாய்வாளர்களின் பல்வேறு அச்சுரூத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஷ்ட்டிப்பதற்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டி வெளி மற்றும் பெரிய பண்டிவிருச்சான் ஆகிய இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் தினம் அனுஷ்ட்டிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று  காலை மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அலுவலகத்தில் இடம் பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட நினைவேந்தல்

வவுனியா குளத்தில் மூழ்கி சிறுமி பலி; காப்பாற்றச் சென்ற இளைஞரும் உயிரிழப்பு

Posted by - November 24, 2017

வவுனியா, மாமடு குளத்தில் மூழ்கி சிறுமியும் இளைஞரும் பலியாகினர். பலியான இருவரும் மகாறம்பைக் குளத்தைச் சேர்ந்த உறவினர்கள் என்று கூறப்படுகிறது பதினைந்து வயதான அச்சிறுமி முதலில் குளத்தில் மூழ்கியதாகவும் அதைக் கண்ட இளைஞர், சிறுமியைக் காப்பாற்றுவதற்காகக் குளத்தில் குதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இருவரும் உறவினர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் இருவரும் கடைசியில் உயிரிழந்தனர். சிறுமி குளிப்பதற்காகக் குளத்தில் இறங்கினாரா, இது விபத்துத்தானா, தற்கொலையா என்ற கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கோட்டாபய கைது செய்யப்பட்டால் பிக்குகள் வீதியில் இறங்குவர்

Posted by - November 24, 2017

கோட்டாபய ராஜபக்சவை அரசு கைது செய்யுமானால், பிக்குகள் பெருமளவில் வீதியில் இறங்கிப் போராடுவர் என முறுத்தட்டுவே ஆனந்த தேரோ கூறியுள்ளார். ‘தாய் மண்ணைக் காக்கும் தேசிய சக்தி’ (மௌபிம சுரக்குமே ஜாதிக்க பலவேகய) சார்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “தற்போதைய அரசு முன்னைய அரசைப் பாரியளவில் பழிவாங்க நினைக்கிறது. இந்த நடவடிக்கைகளின் பேரழிவுகளை நாடு வெகு விரைவில் சந்திக்கும். “மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குத்

மட்டக்களப்பில் பதற்றம் : சிறுமி வைத்தியசாலையில்

Posted by - November 24, 2017

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடாவில் மண் ஏற்றிச்சென்ற கன்டர் வாகனம் சிறுமி ஒருவர் மீது  மோதியதால் சிறுமி  படுகாயமடைந்த நிலையில் மண்டபத்தடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதேவேளையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிறுமி மீது மோதிய கன்டர் ரக வாகனத்தை அடித்து துவம்சம் செய்துள்ளனர். இன்று பிற்பகல் காஞ்சிரங்குடா பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்ற 12 வயது சிறுமியை மண் ஏற்றிவந்த கன்டர் வாகனம் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சிறுமி வவுணதீவு மண்டபத்தடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக