கோட்டாபய கைது செய்யப்பட்டால் பிக்குகள் வீதியில் இறங்குவர்

660 0

கோட்டாபய ராஜபக்சவை அரசு கைது செய்யுமானால், பிக்குகள் பெருமளவில் வீதியில் இறங்கிப் போராடுவர் என முறுத்தட்டுவே ஆனந்த தேரோ கூறியுள்ளார்.

‘தாய் மண்ணைக் காக்கும் தேசிய சக்தி’ (மௌபிம சுரக்குமே ஜாதிக்க பலவேகய) சார்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தற்போதைய அரசு முன்னைய அரசைப் பாரியளவில் பழிவாங்க நினைக்கிறது. இந்த நடவடிக்கைகளின் பேரழிவுகளை நாடு வெகு விரைவில் சந்திக்கும்.

“மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தொல்லைகொடுத்து அதன் மூலம் இன்பம் காணும் அளவில்தான் தற்போதைய அரசு இருக்கிறது.

“அரசியலில் கோட்டாபய ராஜபக்ச இறங்குவதைத் தடுக்கும் முயற்சியாக அவரைக் கைது செய்யவும் அரசு எண்ணியுள்ளதாகத் தெரிகிறது.  கோட்டாபய கைது செய்யப்பட்டால், பெருமளவிலான பிக்குகள் தெருக்களில் இறங்கிப் போராடவுள்ளனர்.”

இவ்வாறு அவர் தெரித்தார்.

Leave a comment