கேரளா கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபா பணத்துடன் பெண் ஒருவர் கைது

347 0
2 கிலோ கேரளா கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபா பணத்துடன் குடும்ப பெண் ஒருவர் இன்று (24.11) யாழ்.பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியர்சரின் கீழான பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே கைதுசெய்துள்ளனர்.
35 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரான என்றும்  2 கிலோ கேரளா கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபா பணமும் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள நபர் ஒருவர் கொண்டு வந்து தருவதாகவும் கணவர் இல்லாத காரணத்தினால் தான் விற்பனை செய்வதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
வுpசாரணைகளின் பின்னர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment