இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருள் தனுஷ்கோடியில் மீட்பு

201 0
தனுஷ்கோடி – கம்பிப்பாடு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 140 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
தனுஷ்கோடி காவற்துறையினர் அதனை மீட்டுள்ளனர்.
இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த கஞ்சா பொதிகள் கடற்கரை மணலினுள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கஞ்சா பொதிகள் இலங்கை பெறுமதியில் சுமார் 1கோடியே 40 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்காக தனுஷ்கோடி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment