அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

202 0
அனுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் முன்னெடுத்த தொடர் உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை தொடர்பான தேசிய இயக்கத்தின் தலைவர் அருட் தந்தை சக்திவேல் இதனைத் தெரிவித்துள்ளார்.
மதியரசன் சுலக்ஷன், கணேஷன் தர்சன், ஆர். திருவருள் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
வவுனியா மேல்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் அவர்களது வழக்கு விசாரணைக்கு, வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்றும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த விடயத்தில் அவர்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட நிலையில், போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment