துறைமுக ஒப்பந்தம் சட்டவிரோதம்- தேசிய சுதந்திர முன்னணி

243 0

மாகம்புர துறைமுக உடன்படிக்கை சர்வதேச சட்டம் மற்றும் உள்நாட்டு ஒப்பந்த விதிமுறைகளுக்கு அமைய சட்டவிரோதமானது என தேசிய சுதந்திர முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ள விடயங்கள் பரஸ்பர விரோதமாக இருப்பதாகவும் அக்கட்சியின் பிரதித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இன்று (29) தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் ஜே.ஆர்.ஜயவர்வன ஆட்சியின் போதும் உடன்படிக்கை ஒன்றின் மூலம் இந்த நாடு இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment