தமிழ் மக்களின் கலாசார தாயகம் – ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு

356 0

hakeem-and-vikneswaranவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் கலாசார தாயகம் என்ற அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எனினும் இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனை காரணம் காட்டி அரசாங்கமும் இந்த விடயத்தை தட்டிக்கழித்து வருகிறது.

இந்த விடயத்தில் எதிர்ப்பை தெரிவிக்க முஸ்லிம்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

எனவே இந்த சவாலைக் கடந்து வடக்கு கிழக்கை மீளிணைக்க அரசாங்கம் பலமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.