தமிழர் தாயக பகுதியெங்கும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

241 0
கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்படுகிறது

அந்தவகையில் வடமாகான சபை ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு முள்ளிவாய்க் கால் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சிறப்புற நடைபெற்றது

இந்நிகழ்வில் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் வடமாகான முதலமைச்சர்  சி வி விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மதத்தலைவர்கள் சிவில் சமூக அமைப்புக்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.