சுதந்திர கட்சி தரப்பினர் கட்சியுடன் இணைய வேண்டும்

212 0

கட்சித் தலைமை யாராக இருந்த போதும் சுதந்திர கட்சி தரப்பினர் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அனைத்து தரப்பினரும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கையுடன் ஒன்றித்து செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.