அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் மே தினம், இந்த முறை கொண்டாடப்படும் – மஹிந்த அணி

286 0

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் மே தினம், இந்த முறை கொண்டாடப்படும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மே தின கூட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கையின் பொருட்டு நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப, அனைத்து தரப்பினரும் இந்தமுறை காலி முகத்திடல் மே தின நிகழ்வில் பங்குகொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, வரலாற்றின் மிகப்பெரிய மே தின நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் நடத்தப்படும் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் மைதானத்தை மஹிந்த அணியினரால் நிரப்ப முடியாதென அரசாங்கம் நினைப்பதாக குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, அரசாங்கத்தின் அந்த எண்ணத்தை மாற்றிக் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.