ஈழத் தமிழர் விவகாரம் – தமிழக சட்ட பேரவையில் தீவிரநிலை

345 0

tamilnaduஈழத் தமிழர் விவகாரம் தொடர்பில் நேற்றையதினம் தமிழக சட்ட சபையில் தீவிரநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஆண்டுக்கான பாதீடு மீதான விவாதம் தமிழக சட்ட சபையில் இடம்பெற்று வருகிறது.

இதன்போது, 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈழத் தமிழர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் துரோகம் இழைத்ததாக, அண்ணா திரவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

இதனை அடுத்து திராவிட முன்னேற்றக்கழகம் குழப்பம் விளைவித்துள்ளது.

இந்த நிலையில் சட்ட சபையின் சபாநாயகரால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.