மண்டைக்கல்லாறு பாலத்தின் திருத்த வேலைகள் (காணொளி)

303 0

கிளிநொச்சி பூநகரி மண்டைக்கல்லாறு பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார்-கண்டி வீதியை இணைக்கும் ஏ32 வீதியில் அமைந்துள்ள மண்டைக்கல்லாறு பாலம் நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த நிலையில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சினால் குறித்த பாலத்தின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக மாற்றுப்பாதை அமைக்கும் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

200 மீற்றர் நீளம் கொண்ட குறித்த பாலத்தினூடாக கரியாலை, நாகபடுவான், வன்னேரிக்குளம் மற்றும் பண்டி வெட்டிக்குளம் ஆகியவற்றில் மாரிகாலங்களில் வழிந்தோடும் நீர் இப்பாலத்தினூடாக பாய்ந்து செல்வது குறிப்பிடத்தக்கது.