கொழும்பு குப்பைகள் கரதியான பகுதிக்கு-கொழும்பு மாநகரசபை

227 0

மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததை அடுத்து கொழும்பில் ஒரு நாளைக்கு சேரும் 350 மெட்ரிக் டொன் குப்பைகளை கரதியான கழிவு சேகரிப்பு பகுதியில் போடுவதற்கு கொழும்பு மாநகரசபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபை நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய கஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த குப்பைகளை பெற்றுக்கொள்ளுமாறு கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது