வென்னப்புவ பகுதியில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்

239 0

​வென்னப்புவ பகுதியில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 17 வயதான சிறுமி மற்றும் 15 வயதான சிறுவனுமே இவ்வாறு பலியாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குடும்ப உறவினர்களுடன் மா ஓய கடலுடன் கலக்கும் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த வேளையே, இவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் பிரதேச மக்களின் உதவியுடன் இவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் மாரவில ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

வென்னப்புவ பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.