7 கோடி தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கைது

270 0

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள், கட்டுநாயக்க வானூர்தி நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 1 மணியளவில் டுபாயில் இருந்து வந்த, கிரேன்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தமது பயண பொதியில் சூட்சமமான முறையில் தங்க ஆபரணங்களை மறைத்து வைத்து கடத்த முற்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடம் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்