மீதொட்டமுல்ல சம்பவத்தால் உயிரிழந்த நபர்களின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை விரைவாக மேற்கொண்டு சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மீதொட்டமுல்ல சம்பவம் தொடர்பான விபரம், காவற்துறையால் கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க முன்னிலையில் சமர்ப்பித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீதொட்டமுல்ல குப்பை மேட்டுச் சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 24 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, குப்பை மேட்டு சரிவில் சிக்குண்டு காணாமல் போனவர்களை மீட்பதற்கான மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக இராணு பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.