கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்தின் கீழுள்ள 900 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை (காணொளி)

265 0

கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்தின் கீழுள்ள 900 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்து நீர் 10 அடியில் காணப்படுவதனால், குளத்தின் நீரின் அளவை கருத்திற் கொண்டு மருதநகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் சுமார் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கிளிநொச்சி இரணைமடுத்திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் இரனைமடுத் திட்டப்பணிப்பளரும், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளருமான எந்திரி நவரத்தினம் சுதாகரன் தலைமையில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டிற்கான இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக பயிர்ச் செய்கைக்கான முன்னோடிக்கூட்டமும், திட்ட முகாமைத்துவ குழுவினுடைய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்ட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தின் முடிவுகள் எதிர்வரும் வாரங்களில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற உள்ள சிறுபோக பயிர்ச்செய்கை கூட்டத்தில் இறுதி முடிவாக நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.