யாழ். மீசாலைப் பகுதியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எறிகணை

244 0

யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் ஆலயம் ஒன்றுக்கு நீர்தாங்கி அமைக்க வெட்டப்பட்ட குழியில் இருந்து வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் நேற்றைய தினம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த எறிகணையானது மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலயம் ஒன்றிக்காக நீர் தாங்கி ஒன்றை நிர்மாணிப்பதற்கு அத்திவாரத்தினை வெட்டிய போது, வெடிக்காத நிலையில் இருந்த எறிகணையை பார்த்த அயலவர்கள் உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இதனை அகற்றுவது தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த அறிக்கையை பரிசீலித்த நீதவான் யாழ் அதிரடிப் பொலிஸார் உதவியுடன் இந்த எறிகணையை அங்கிருந்து மீட்டு செயலிழக்க வைக்குமாறு உத்தரவிட்டார்.