வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் ‘நல்லூர் பிரகடனம்’ வெளியீடு

236 0

வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் ‘நல்லூர் பிரகடனம்’ என்ற பெயரில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை வெளியிட்டனர்.

நேற்று இந்த கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டது.

வடக்கில் பொதுமக்களுக்கு சொந்தமான பாரியளவு காணிகள் பாதுகாப்பு தரப்பினர் வசமும், பெருவர்த்தகர்களிடமும் உள்ளன.

இந்த நிலையில் காணிகளை விடுவித்தல், அடிப்படை வசதிகள், அத்தியாவசிய சேவைகள் பெற்றுக்கொடுத்தல், வாழ்வாதாரத்தை உறுதி செய்தல், நட்ட ஈடு வழங்குதல், கடற்பிரதேசத்தில் தொழில் செய்வதற்கான வாய்ப்பை வழங்குதல் போன்ற கோரிக்கைகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன.