கச்சத்தீவை முற்றுகையிடுவோம் – இந்திய மீனவர்கள் எச்சரிக்கை

263 0

தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாதபட்சத்தில், கச்சத்தீவை முற்றுகையிடுவோம் என இந்திய மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.

படகுகளை விடுவித்தல், கச்சத்தீவில் தமிழக மீனவர்களது உரிமையை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்தப் பேச்சின்போது தமிழக தரப்பினரால் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கோரிக்கைகள் ஏற்காத பட்சத்தில் கச்சத்தீவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக மீனவர்கள் சங்கத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.