நாடாளுமன்ற உறவுகளை பலப்படுத்த இலங்கை மற்றும் ஜெர்மனி முக்கிய பேச்சு!

260 0

இலங்கை மற்றும் ஜெர்மனிக்கு இடையில் நாடாளுமன்ற உறவுகளை பலப்படுத்துதல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மன் பேராசிரியர் நார்பெர்ட் லாமெர்ட், மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போதே மேற்கண்ட விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் இந்த கலந்துரையாடலில், பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் பிரதியமைச்சர் ஹெரான் விக்ரமரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.